அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை கூறியுள்ளார். அதில் அவர், ‛‛நான் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தேன். என் கணவர் பாக்சர் என்பதால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். நான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னை தாக்கியதில் குழந்தை வெளியே வந்துவிட்டது. அதை பார்த்த என் கணவர் ஓடி விட்டார்.
பிறகு நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கே நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். ஏற்கனவே என் முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எனவே, ராகுலை காப்பாற்ற போராடினேன். 9 மாதங்கள் இங்குபேட்டரில் இருந்தான். அவனுக்காக செய்யாத செலவுகள் இல்லை. அதை சமாளிக்க தான் நான் என் பெற்றோருடனேயே வந்து தங்கிவிட்டேன். என்னை போல் வாழ்க்கையில் எதையும் சிரித்துக்கொண்டே தைரியமாக எதிர் கொள்பவர்கள் அனைவரது பின்னாலும் ஒரு சோகக்கதை இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும்,'' என்றும் அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியுள்ளார்.