துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களின் வருகையை ஆரம்பித்து வைத்த படம் என்றால் 2007ம் ஆண்டில் வந்த 'முனி' படம்தான். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண், ராகவா லாரன்ஸ், வேதிகா மற்றும் பலர் நடித்தனர். இப்படம் பெரிய வெற்றியைக் குவித்தது.
அதற்கடுத்து அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கும் போது அதற்கு 'காஞ்சனா' எனப் பெயர் வைத்தார் ராகவா லாரன்ஸ். அதன்பின் குழந்தைகள் கூட 'காஞ்சனா பேய்' என அழைக்க ஆரம்பித்ததால் அதற்கடுத்த பாகங்களும் காஞ்சனா 2, காஞ்சனா 3 என்ற பெயரிலேயே வெளிவந்தது.
'முனி' என்ற முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று பார்த்தால் 'முனி' 4ம் பாகமாக 'காஞ்சனா 3' படம் 2019ல் வெளிவந்தது. இப்போது 'காஞ்சனா 4'ம் பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால்தான் 'காஞ்சனா 4' படத்தையும் தைரியமாக எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
2025ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.