ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சிவகங்கை மாவட்டம் சிக்கனம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக் கருப்பி. இவரது கணவர் குமார். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது மகளின் காதணி விழாவுக்காக தகர உண்டியலில் சிறுக சிறுக ஒரு லட்ச ரூபாய் பணத்தை சேர்த்து வைத்திருக்கின்றார் முத்துக் கருப்பி. அந்த உண்டியலை வீட்டுக்குள்ளேயே குழித்தோண்டி புதைத்து வைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் அந்த தகர உண்டியலுக்குள் கரையான் சென்று அந்த ரூபாய் நோட்டுகளை அரித்து இருக்கிறது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அந்த உண்டியலை முத்துக்கருப்பி திறந்து பார்த்தபோது, ரூபாய் நோட்டுகளை கரையான் அரித்து சேதப்படுத்தி இருப்பதை பார்த்து பலத்த அதிர்ச்சி அடைந்தவர் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அப்படி அவர் கதறுவதை பார்த்த ஒருவர், அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அந்த பெண்ணை அழைத்து கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் தான் மாற்றி தருவதாக உறுதி அளித்து இருக்கிறாராம்.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக் கருப்பி மற்றும் அவரது கணவர் குமார் ஆகிய இருவரையும் சென்னைக்கு வர வைத்து தனது மாற்றம் தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண உதவி செய்திருக்கிறார். அப்போது கரையான் அரித்த அந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கி பார்த்துள்ளார் லாரன்ஸ். அதையடுத்து அந்த பெண்ணிடத்தில் ஒரு லட்ச ரூபாயை தனது சார்பில் அவர் கொடுத்தபோது கண்ணீர் மல்க வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.