தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஷெரின். ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்தார். அதன் மூலம் 'போலீஸ் டாக்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஷெரினின் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்கிறார்கள். இதனால் ஷெரின் தாயின் பராமரிப்பிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஷெரினின் தந்தை ஒரு வாரத்திற்கு முன்பு காலமானார். ஆனால் அவர் மரணம் அடைந்தது குறித்து அவரின் குடும்பத்தினர் ஷெரினுக்கு தெரிவிக்கவில்லை. தற்போதுதான் ஷெரினுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வேதனையை பகிர்ந்துள்ளார், “நான் உங்களை (தந்தையை) மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஆனால் இன்றுதான் எனக்கு தகவல் கிடைத்தது, அதைக்கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்தப் படம் தான் என்னிடம் உள்ளது, இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ” என பதிவிட்டுள்ளார்.