பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மாபெரும் நிகழ்ச்சி ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள "சமத்துவ சிலை" என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான ராமானுஜரின் சிலை அருகில் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் நாலாயிர திவ்ய பிரபந்தம் (4000 திவ்ய பிரபந்தம் என்பது கி.பி 8ம் நூற்றாண்டுக்கு முன்னர் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட 4,000 பாடல்களின் தொகுப்பாகும். ஆழ்வார் என்ற சொல்லுக்கு "முழ்கி இருப்பவர்" என்று பொருள். அவர்கள் தங்கள் இறைவனான விஷ்ணுவிடம் பக்தி மற்றும் அன்பில் மூழ்கியதால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்) இசைஞானி இளையராஜா, நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களுக்கு சிம்பொனி இசை இசைக்கப்பட்டது.
முன்னதாக இளைய ராகம் இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மடாதிபதி சின்ன ஜீயர் சுவாமிகள், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படும் திராவிட வேதம், தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பு குறித்து மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தனது பேராதரவை அளித்திருந்தது.
தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தலைவர் போஸ், துணைத்தலைவர் தர்மசீலன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிவாஜி, பொருளாளர் நேரு சாஸ்திரி துணைப்பொருளாளர் குமராராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த சமத்துவ சிலை நிர்வாகிகளுக்கு தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.