தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அவ்வப்போது தன்னை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சுற்றுலா செல்லும் சமந்தா இப்போது கோவை, ஈஷா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தியானம் செய்வது உள்ளிட்ட சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அதன் உடன், ‛‛நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்பவர்களை கண்டால் அது பாக்கியம். ஞானம் பெற நீங்கள் தான் இந்த உலகில் அதை தேட வேண்டும். உங்கள் மீது பல விஷயங்கள் திணிக்கப்படுவதால் ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல, அதற்காக உழைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார் சமந்தா.