இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி சார்பாகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும் கூட்டணி கட்சிகளான பாஜக, ஜனசேனா கட்சி ஆகியவற்றுடன் மந்திரி சபையை அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கடுத்து பவன் கல்யாண் அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்று முடிந்த பின் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் மேடை அருகில் அமர்ந்திருந்த மற்ற மத்திய அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றார் பவன் கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.