சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அது மட்டுமல்லாது அவரது கட்சி போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தனது மகன் அகிரா, மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய். பவன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது மகன் அகிரா தனது அப்பாவுடன் டில்லி வரை சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார் ரேணு.
இந்நிலையில் இன்று(ஜூன் 12) ஆந்திர மந்திரிசபையில் அமைச்சராக (துணை முதல்வர் வாய்ப்பு) பதவியேற்ற பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு தனது மகன், மகள் ஆகியோர் அவரது அப்பா பதவியேற்பு விழாவுக்கு ரெடியாகும் போட்டோவைப் பதிவிட்டு, பவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.