ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அழகும், திறமையும் இருந்தும் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அடைந்தால் அதில் நடித்த நடிகரையோ, நடிகையோ ராசி இல்லாதவர் என்பார்கள். அந்த வகையில் அந்தக் காலத்தில் அப்படி ஒரு பெயரை பெற்றவர் எஸ்.பி.எல்.தனலட்சுமி. 1935ம் ஆண்டு நேஷனல் மூவி டோன் என்ற தயாரிப்பு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியின் முதல் படம் 'பார்வதி கல்யாணம்'. முதல் படம் என்பதால் அதில் நடிக்க தகுதியானவர்களை தமிழ்நாடு முழுவதும் தேடினார் தயாரிப்பாளர் மாணிக்கம் செட்டியார்.
அந்த தேடலின் ஒரு பகுதியாக அவர் தஞ்சாவூர் சென்றபோது தனலட்சுமியின் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரையே தனது படத்தின் நாயகியாக தேர்வு செய்தார். நடனம் மட்டுமல்ல பாடுதிலும் திறமையானவராக இருந்தார் தனலட்சுமி. நடித்த முதல் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து பி.கே.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் 'வசந்த சேனா' படத்தில் நடித்தார். அதன் பின்னர் 'சௌபாக்கியவதி' படத்தில் நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த 'காளமேகம்' படத்திலும், 'தேச பக்தி' என்ற படத்திலும் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது ஒரு சில படங்கள் சுமாராக போனது.
7 படங்களில் மட்டுமே நடித்த தனலட்சுமி சினிமாவை விட்டு விலகி இசை கச்சேரிகளில் கவனம் செலுத்தினார். தனலட்சுமிதான் தனது அக்கா மகள் டி.ஆர்.ராஜகுமாரியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாக மாறினார்.