இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னட நடிகரான தர்ஷன், அவரது காதலியான பவித்ரா கவுடா உடன் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து மேலும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதாகியுள்ள தர்ஷன் போலீஸ் விசாரணைக்காக அன்னபூர்னேஸ்வரி நகர் காவல்நிலையத்தில் உள்ளார். அங்கு வந்து தர்ஷனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சிலர் திரண்டு வந்து கோஷம் போட்டுள்ளனர். அதனால், அந்த காவல் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனிடையே ரேணுகா சுவாமி உடலை எடுத்துச் சென்றதாக கருதப்படும் வாகனங்கள் பற்றிய வீடியோவை சிசிடிவி மூலம் போலீசார் கைப்பற்றி உள்ளார்களாம். இந்த கொலை வழக்கில் பவித்ரா கவுடா நம்பர் 1 குற்றவாளியாகவும், தர்ஷன் நம்பர் 2 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.