ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்த விஜய்சேதுபதி அதன்பிறகு 19 (1) ஏ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தில் பெரிய வரவேற்பை தரவில்லை. என்றாலும் மலையாள படங்களின் மீதான அவரது ஆர்வமும் பிரமிப்பும் தற்போதும் குறையவில்லை.
குறிப்பாக அவர் கூறும்போது, “மலையாள திரையுலகம் தற்போது அதன் அற்புதமான காலகட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான எல்லா மலையாள படங்களையும் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் பிரேமலு திரைப்படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன். அந்த படம் ரொம்பவே இனிமை. அதில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமல்லாது நடித்த அனைவருமே அற்புதமாக பங்களிப்பு செய்திருந்தனர். அது மட்டுமல்ல மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படமும் என்னை வெகுவாக கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.