திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்திருக்கும் படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்திற்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றுவது இல்லாமல் குரலையும் கம்பீரமாக மாற்றி டப்பிங் பேசப் போகிறார்.
மேலும், இந்த அமரன் படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி திரைக்கு வருவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அதே நாளில் அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் அமரன் படம் தள்ளிப் போனது. இந்த நிலையில் தற்போது புஷ்பா-2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போதைய நிலவரப்படி விக்ரமின் தங்கலானும், சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.