ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஆரம்பமாகும் என்று தகவல் வெளியானது. தேர்தல் முடிவுகள் வந்த ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இதுவரையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
ரஜினிகாந்த் தான் நடித்து வந்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை அவசரப்படுத்தி முடிக்க வைத்தார். 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் அப்படி செய்தார் என்றார்கள். இந்நிலையில் 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகி வருவது குறித்து ரஜினிகாந்த் தனது வருத்தத்தை சற்றே கோபமாக வெளிப்படுத்தியதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கான திரைக்கதையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார் லோகேஷ். ஆனால், இன்னமும் அதை முடிக்கவில்லையாம். முழு திரைக்கதையையும் படித்துப் பார்க்காமல் வரமாட்டேன் என ரஜினி சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல். இன்னும் சில நாட்களில் அதை முடித்துக் கொடுப்பதாக லோகேஷ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளதாம். அதனால், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.