தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விடுதலை படத்தை அடுத்து சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த சீடன் படத்தில் தமிழில் அறிமுகமானார். மேலும் இந்த கருடன் படத்திற்கு பிறகு சில புதிய தமிழ் படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் மார்கோ என்ற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார் உன்னி முகுந்தன். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை கருடன் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் ரத்தம் வழியும் கத்தியை தனது வாயில் கடித்தபடி, ரத்தம் தெறிக்க வெறித்தனமாக நின்று கொண்டிருக்கிறார் உன்னி முகுந்தன்.