ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இருப்பினும் இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், தொடரின் நாயகன் சமீர் அகமது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ளார்.
அப்போது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியல் முடிவுக்கு வருகிறது. அதற்கு காரணம் டிஆர்பியாக கூட இருக்கலாம். கடந்த ஷூட்டிங்கின் போதே சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. நாங்கள் மனதளவில் அதற்கு தயாராகிவிட்டோம். சில ரசிகர்கள் சீரியல் முடியப் போவதை குறித்து கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். எல்லோருடைய வாழ்விலும் ஒரு திருப்பம் வரத்தான் செய்யும். அது சந்தோஷமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சில மாற்றம் வரும் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று கூறியுள்ளார்.