'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளரான அஸ்வினி தத் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் கனவான அமரவாதி நகரை ஆந்திராவின் தலைநகராக மாற்ற வேலைகள் ஆரம்பமாகி உள்ளன. அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அஸ்வினி தத் தயாரித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை அங்கு நடத்தத் திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால், படத்தின் நாயகனான பிரபாஸ், அமராவதியில் நடத்த வேண்டாம், ஐதராபாத்திலேயே நடத்துங்கள். அங்கு நடத்தினால் தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் வரும் என்று கூறிவிட்டாராம். எனவே, அமராவதியில் நடத்தவிருந்த நிகழ்ச்சியை ஐதராபாத்திற்கு மாற்றிவிட்டார்களாம்.
இது குறித்து விசாரித்த போது, அங்குள்ள அடிப்படை வசதிகள், மழைக்காலம் என காரணம் சொல்வதாகத் தகவல்.