சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கன்னட திரையுலகில் பிரபல நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி டார்ச்சர் கொடுத்தார் என்பதன் காரணமாக தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் தர்ஷனுடன் பவித்ரா கவுடா உட்பட 10 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னட திரையுலகை சேர்ந்த கிச்சா சுதீப், உபேந்திரா நடிகை ரம்யா உள்ளிட்டோர் ரேணுகா சுவாமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தர்ஷனுக்கு எதிராக கருத்துக்களை கூறியுள்ளனர்.
அதே சமயம் நடிகை சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை ரட்சிதா ராம், தர்ஷனின் கைது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ரட்சிதா ராம் கன்னடத்தில் அறிமுகமானது தர்ஷன் கதாநாயகனாக நடித்த புல்புல் என்கிற படத்தில் தான். அதை தொடர்ந்து வரிசையாக அவருடன் மூன்று படங்களில் நடித்துள்ளார் ரட்சிதா ராம். கடந்த வருடம் வெளியான கிரந்தி என்கிற படத்திலும் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரட்சிதா.
இந்த நிலையில் தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “திரையுலகில் என்னை அறிமுகப்படுத்திய தர்ஷன் சார் எனது குரு போன்றவர். என்னை வழிநடத்திய அவர் இதுபோன்று ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை நம்புவதற்கே சிரமமாக இருக்கிறது. போலீஸார் உண்மையை வெளியே கொண்டு வருவார்கள் என நான் நம்புகிறேன். மேலும் மீடியா நண்பர்களும் இந்த வழக்கில் வெளிப்படை தன்மையுடன் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார் ரட்சிதா ராம்.