ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இவற்றில் வெற்றி படங்கள் என்றால் 10 சதவீதம் கூட இருப்பது இல்லை. இந்தாண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றில் நல்ல லாபம் தந்த படம் அரண்மனை 4 மட்டுமே. ஸ்டார், கருடன், மகாராஜா படங்கள் ஓரளவுக்கு வசூலை தந்தன. மற்ற படங்கள் பெரும்பாலும் நஷ்டம் தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். லைகா போன்ற பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக நடிகர்களின் சம்பளம் உள்ளது. படத்தின் பட்ஜெட்டில் பாதி நடிகர்கள் சம்பளத்திற்கே சென்று விடுகிறது.
முன்னணி நடிகர்கள் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நஷ்டம் அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. இந்த பிரச்னை நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இதை சரி செய்யும் பொருட்டு நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க சொல்லி வலியுறுத்தி விரைவில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்க முடிவெடுத்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த விஷயமும் நடக்காது. படம் ரிலீஸ் கூட தடைப்பட வாய்ப்பு உள்ளது.