படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இந்தியன் படத்தை அடுத்து கமலும், ஷங்கரும் இணைந்திருக்கும் படம் இந்தியன்- 2. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் ஜூலை 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பிரமோசன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தியன் 2 படம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் பேசிய இயக்குனர் ஷங்கர், ‛‛நான் இயக்கும் படங்களை பொருத்தவரை இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற மாதிரியான ஒரு கான்செப்டில்தான் உருவாகும். இந்த படமும் அப்படித்தான் உருவாகி இருக்கிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் மீண்டும் இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படம். இந்த படத்தின் கதைக்களம் தமிழ்நாட்டில் நடக்கிறது என்றாலும் இந்தியா முழுக்க உள்ள பல மாநிலங்களுக்கும் கதை சொல்வது போல் இருக்கும். காரணம் இந்தியா முழுக்க உள்ள குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.
இந்தியன் படத்தில் 40 நாட்கள் மேக்கப் போட்டு நடித்த கமல் சார், இந்த படத்தில் 70 நாட்கள் மேக்கப் போட்டு நடித்து இருக்கிறார். ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் அவர் மேக்கப் போட்டுக் கொண்டார். சாப்பிட முடியாது, தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். அந்த அளவுக்கு இப்படத்தில் கமல் சார் மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்திருக்கிறார். அவருக்கு போடப்பட்ட மேக்கப்பை கலைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். அதோடு, அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும்போது அங்கு கமலை பார்க்க முடியாது. இந்தியன் தாத்தாவை தான் பார்க்க முடியும். அந்த கதாபாத்திரமாகவே முழுமையாக மாறி போயிருந்தார்.
அதிலும் ஒரு காட்சியில் கயிற்றில் தொங்கிக்கொண்டு வேறொரு மொழியை பேசி, கையில் வரைந்து கொண்டே நடித்தார். உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது. அந்த அளவுக்கு கமல் சார் இந்த படத்தில் பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.