5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் 295.5 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி- 2, சாஹோ, ஆதி புருஸ், சலார் ஆகிய நான்கு படங்களும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது ஐந்தாவதாக இந்த கல்கி படமும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. மேலும், கல்கி படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் எப்போது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.