மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி மற்றும் நீலிமா ராணி இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சூட்டிங் ஒன்றில் தேவயானியை சந்தித்த நீலிமா பல வருடங்களுக்கு பின் தேவயானியை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இருவரும் புதிய சீரியலில் இணைகிறார்களா? கோலங்கள் பார்ட் 2 வருகிறதா? என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதியமான் இயக்கும் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாக நீலிமா ராணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.