திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். நேற்று திடீரென அஜித் சென்னை திரும்பினார். எதற்காக அவர் சென்னை வந்தார், படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, இல்லை மீண்டும் படப்பிடிப்பு நின்றதா என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அஜித் சென்னை திரும்பியதன் காரணம் தெரிய வந்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. அதற்காகவே அவர் சென்னை திரும்பி உள்ளார். இன்று(ஜூலை 3) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. ஷாலினி உடன் மருத்துவமனையில் அஜித் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலானது.
எதற்காக ஷாலினிக்கு ஆபரேஷன் நடந்தது என்ற விபரம் வெளியாகவில்லை.