சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கோயம்புத்தூரை சேர்ந்தவர் அதுல்யா ரவி. 'காதல் கண்கட்டுதே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சுட்டுபிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, எண்ணி துணிக, வட்டம், காடவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுல்யா கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது. சம்பளம் தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட்டை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.