வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

கோயம்புத்தூரை சேர்ந்தவர் அதுல்யா ரவி. 'காதல் கண்கட்டுதே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சுட்டுபிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, எண்ணி துணிக, வட்டம், காடவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுல்யா கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது. சம்பளம் தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட்டை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.