திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரபல சின்னத்திரை நட்சத்திரமான அறந்தாங்கி நிஷா ஏர்போர்ட்டில் வைத்து தனக்கு நடந்த பாடிஷேமிங் அவமானம் குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஏர்போர்ட்டில் நிஷாவிடம் பேசிய நபர் நீங்கள் விஜய் டிவி நிஷாவா என ஆச்சரியத்துடன் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு நிஷா ஏன் என்ன ஆச்சு? என்று கேட்க, இவ்வளவு நாளா எப்படி ஏமாந்து போயிருக்கோம். டிவியில உங்கள கலரா காட்டுறாங்க. ஆனா, நீங்க இவ்வளவு கருப்பா இருக்கீங்க என மறுபடி மறுபடி நிஷாவின் நிறத்தை வைத்தே பேசியுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் கருப்பா இருப்பது ஒன்றும் அசிங்கம் இல்லை என சொல்லிவிட்டு நிஷா வந்துவிட்டார்.
அதன்பின் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'உள்ளுக்குள் அதிகம் கோவம் வந்தாலும் அதை வெளிகாட்டவில்லை. அதற்கு காரணம் உணர்வு ரீதியாக யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக தான். எவ்வளவோ வளர்ச்சி வந்தாலும் இது போன்ற மக்களின் மனநிலை இன்னும் மாறவில்லை. இவ்வளவு கேவலமான மனநிலையோடு இருப்பவர்களுடன் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்று வருத்தத்துடன் அந்த வீடியோவில் நிஷா பேசியிருக்கிறார்.