தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண். 'உய்யாலா ஜம்பால' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக 'நா சாமி ரங்கா' படத்தில் நடித்தார். தற்போது திரகம்பர சாமி, பாலே உன்னாலே படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, தற்போது நடிகையுடன் தொடர்பில் இருக்கும் ராஜ் தருண் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “ராஜ் தருண் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.