தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படம் பான் இந்தியா படமாக இந்த வாரம் ஜுலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எஸ்ஜே சூர்யா கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார். “ஷங்கர், கமல் பேசும்போது யார் இந்தியன் என்பது குறித்து பேசினார்கள். இந்தியாவிற்காக யார் சிறந்ததைச் செய்கிறார்களோ அவர்களே உண்மையான இந்தியன். இங்கே ஒரு இந்தியன் இருக்கிறார், அவர் எனக்குச் சிறந்த நண்பர். அவர்தான் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண். எனது நண்பர் பவன் கல்யாண் ஆந்திராவின் முதல்வராக வருவார் என்று மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்னேன். அதில் பாதி தற்போது நடந்துள்ளது, மீதி நடப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இந்த மேடையில் அவரைப் பற்றி நினைவு கூர்வது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
பவன் கல்யாண் பற்றி எஸ்ஜே சூர்யா பேசியதும் அரங்கில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். அந்த சத்தம் அடங்க கொஞ்ச நேரம் ஆனது.