ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அந்தப் படத்தில் அரவிந்த்சாமிக்கான சம்பளத்தில் தர வேண்டிய பாக்கித் தொகை 30 லட்சம், வருமான வரித்துறைக்கு தயாரிப்பாளர் செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகை 27 லட்சம், பெற்ற கடன் தொகை 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தயாரிப்பாளர் அளிக்கவில்லை என அரவிந்த்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் குமாரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் வழக்கை ஜுலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தயாரிப்பாளர் எங்களிடம் தீர்வுக்காக அணுகியுள்ளார். நீங்கள் எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதைத் தீர்க்க முடிகிறதா என்று பார்ப்போம்,” என்று நீதிபதியிடம் கேட்டார்.
அவரது கோரிக்கைக்கு சம்மதித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.