விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
இயக்குனர் கே.பாலச்சந்தரின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பாலச்சந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். இவ்விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா “ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவுக்கு பாலச்சந்தரின் பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு நன்றி. அந்த தீவில் அவரது முழு உருவ சிலையை வைக்க வேண்டும்” என்றார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: நான் அவரைப் (பாலச்சந்தர்) பற்றி பேசாத நாளே இல்லை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல. தனக்குப் பயனில்லை என்ற நிலையிலும் என்னைப்போல் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தளவிற்கு, விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று(நேற்று) அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள் எனக் கூறியுள்ளார்.