இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா, 'பலே பாண்டியா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் 'றெக்கை முளைத்தேன்'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து, இயக்குகிறார். பின்னணி இசையை தரண்குமார் அமைக்க, பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது “இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்” என்றார்.