சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது அவர் 35 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் பாக்யராஜ், கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து இந்த படம் திரைக்கு வர இன்னும் 35 நாட்கள் இருக்கும் நிலையில், அது குறித்த ஒரு தகவலை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் நிவேதா தாமஸ்.
அந்த பதிவில், எனது படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. அந்த படத்தை பார்க்க சின்ன குழந்தை போன்று ஆர்வத்தில் காத்திருக்கிறேன். எனது முகத்தில் 35 படம் சிரிப்பை வர வைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். இது எனது படம் என்று நான் பெருமையாக கூறுகிறேன். ஆனபோதிலும் இன்னும் 35 நாட்களுக்கு பிறகு இது உங்கள் படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலானது.