ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராமு காரியத். 'திரமாலா' என்ற படத்தை 1953ம் ஆண்டு விமல்குமார் மற்றும் பி.ஆர்.எஸ்.பிள்ளையுடன் இணைந்து இயக்கினார். 1954ஆம் ஆண்டில் 'நீலக்குயில்' படத்தை பி.பாஸ்கரனுடன் இணைந்து இயக்கி அறிமுகமானார். இந்த படம் மலையாளத்தின் முதல் சிறந்த படமாக கருதப்படுகிறது.
நீலக்குயிலுக்குப் பிறகு, மின்னாமினுங்; புத்ரன்; மூடுபடம்; பரதநாட்டியம், ஏழுராத்திரிகள், அபயம், மாயா, நெல்லு, த்வீபு, அம்முவின்றே ஆட்டின்குட்டி, மலங்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அனைத்து படங்களுமே மலையாள சினிமாவின் முக்கியமான படங்களாக இப்போதும் பேசப்படுகிறது.
1985ம் ஆண்டு இவர் இயக்கிய 'செம்மீன்' படம் மலையாள சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. தமிழில் '16 வயதினிலே' படம் போன்று இப்போதும் செம்மீன்தான் நம்பர் ஒன் படமாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியான மது மற்றும் ஷீலா ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்றனர். செம்மீன் மலையாளத் திரையுலகின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. தகழி, சிவசங்கர பிள்ளையின் நாவலின் தழுவலான இப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் மலையாளத் திரைப்படமாகும். 1972ம் ஆண்டு தமிழில் 'கண்ணம்மா' என்ற படத்தை தயாரித்தார். இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். லட்சுமணன் என்பவர் இயக்கி இருந்தார். பாடல்கள் வெற்றி பெற்றபோதும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.