இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாபி சிம்ஹா வில்லனாக நடித்த ‛மெட்ரோ' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். அதை தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிளடி மணி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான ஹஸ்னா என்பவருக்கும் சமீபத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் மணமேடையில் மணமக்களுக்கு சிம்பு கூறிய அறிவுரை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் சிம்பு பேசும்போது, “மணமகன் சிரிஷ் தான் கரம் பிடித்துள்ள பெண்ணை அவரது வீட்டில் அவரது தந்தை எப்படி அன்பு செலுத்தி கவனித்து இருப்பாரோ அதேபோன்று அன்பை செலுத்த வேண்டும். அதேபோல மணப்பெண்ணும் தனது தந்தை மீது எந்த அளவிற்கு அன்பும் மரியாதையும் செலுத்துவாரோ அதேபோல தனது கணவனுக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.