ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாபி சிம்ஹா வில்லனாக நடித்த ‛மெட்ரோ' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். அதை தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிளடி மணி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான ஹஸ்னா என்பவருக்கும் சமீபத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் மணமேடையில் மணமக்களுக்கு சிம்பு கூறிய அறிவுரை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் சிம்பு பேசும்போது, “மணமகன் சிரிஷ் தான் கரம் பிடித்துள்ள பெண்ணை அவரது வீட்டில் அவரது தந்தை எப்படி அன்பு செலுத்தி கவனித்து இருப்பாரோ அதேபோன்று அன்பை செலுத்த வேண்டும். அதேபோல மணப்பெண்ணும் தனது தந்தை மீது எந்த அளவிற்கு அன்பும் மரியாதையும் செலுத்துவாரோ அதேபோல தனது கணவனுக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.