திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப் போவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்து டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
தற்போதைய நிலவரப்படி அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால், 2025ம் ஆண்டுக்கு படம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லையாம். 'கல்கி 2898 ஏடி' படத்தின் வரவேற்பும், வசூலும் இந்தப் படக்குழுவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். வேறொரு பிரம்மாண்டத்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள். அதற்கு ஈடாக 'புஷ்பா 2' படத்திலும் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும், பெரும் வசூலைக் குவிக்க முடியும் என்று ஆலோசித்து வருவதாகத் தகவல்.
டோலிவுட்டில் பரவி வரும் இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.