பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'மகாராஜா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், அதன் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் நித்திலன், “டியர் விஜய் அண்ணா, இந்த அறிவூட்டும் சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 'மகாராஜா'வைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை பெருமைப்படுத்துகின்றன. அது எனக்கு ஒரு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். லவ் யூ ணா. எனது தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மேனேஜராக அவரது வலதுகரமாக இருக்கும் ஜெகதீஷ் 'மகாராஜா' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.