பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த 'தலைவன் தலைவி' படம், முதல் 3 நாட்களில் 20 கோடி வரை வசூலித்து நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ளது. இந்த வாரம் படம் நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியால் தமிழ்திரையுலகம் மட்டுமல்ல, வெற்றிக்காக காத்திருந்த சத்யஜோதி நிறுவனம், விஜய்சேதுபதியும் ஹேப்பி.
படத்தில் இடம்பெற்ற குடும்ப பிரச்னை, மாமியார், மருமகள், நாத்தனார் பிரச்னை பெண்களை கவர்ந்துள்ளதால் பேமிலி ஆடியன்ஸ் அதிகம் வருகிறார்களாம். படத்தின் வெற்றிக்கு விஜய்சேதுபதி தவிர, நித்யா மேனன், அவர் மாமியராக நடித்த தீபாசங்கர், அம்மாவாக வந்த ஜானகி, நாத்தனாராக வந்த ரோஷினி ஆகியோரும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் 100 கோடி வசூலை தாண்டியது. அதை இந்த படம் முறியடிக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும் என்கிறார்கள். உலகம் முழுக்க ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீனில் தலைவன் தலைவி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வாரம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே, அதிர்ஷ்டம் இருந்தால் தலைவன் தலைவி அந்த வசூலை எட்டும் கூறப்படுகிறது. இதற்கிடையே, விஜய்சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு நல்ல படம் கொடுத்த, நம்ம ஹீரோவுக்கு மட்டும் எதற்கும் துணிந்தவன் படத்தை கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்று சூர்யா ரசிகர்கள் புலம்புவதாக சோஷியல் மீடியாவில் மீம்ஸ் வருகிறது.