அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
கன்னட பட இயக்குனர் தருண் சுதிரும், நடிகை சோனலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இந்த நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் தனது ரசிகர் ஒருவரை கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் தற்போது சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு முதல் திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் சுதீர். இதற்கு முக்கிய காரணம், இயக்குனர் சுதீரும், சோனலும் காதலித்தபோது இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்போது, அவர்களின் பெற்றோரை சந்தித்து பேசி சமாதானம் செய்து இவர்கள் திருமணத்திற்கு தர்ஷன் தான் சம்மதம் வாங்கி கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே சிறைக்கு சென்று அவருக்கு முதல் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது அவரிடத்தில் திருமணம் அழைப்பிதழை பெற்றுக் கொண்ட நடிகர் தர்ஷன், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக திருமணத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாராம்.