அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் |
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் பிஸியான நடிகையாக மாறி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் திருமணம் ஆகியவற்றால் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் பாலும் பழமும் என்கிற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் மலையாள குணச்சித்திர நடிகர் இர்ஷாத் என்பவர் மீரா ஜாஸ்மினுடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.. அது மட்டுமல்ல 'பாடம் ரெண்டு சல்லாபம்' என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே.. கடந்த 2003-ல் இயக்குனர் டிவி சந்திரன் இயக்கத்தில் வெளியான ‛பாடம் ஒன்னு ஒரு விலாபம்' என்கிற படத்தில் மீரா ஜாஸ்மினின் கணவராக நடித்திருந்தார் நடிகர் இர்ஷாத்.
அந்த படம் மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கேரள அரசின் மாநில விருதையும் பெற்று தந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் சந்தித்து இருப்பதும், நடிகர் இர்ஷாத் இதுபோன்று ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருப்பதை பார்க்கும்போதும் ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்களோ என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.