துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
‛பக்த துருவ மார்க்கண்டேயா' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஸ்வினி. பின்னர் 'பலே தம்முடு' என்ற படத்தின் மூலம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயின் ஆனார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமிழில் கற்பூர தீபம், மாட்டுக்கார மன்னாரு, கண்மணியே பேசு, எடுத்த சபதம் முடிப்பேன், தர்மா, கும்பகோணம் கோபாலு, மானசீக காதல், உனக்காக எல்லாம் உனக்காக, என்னம்மா கண்ணு, பெண்கள், பிரியாத வரம் வேண்டும், மிட்டா மிராசு, ஆட்ட நாயகன் போன்றவற்றில் இவர் நடித்துள்ளார். பார்திபனுடன் பொண்டாட்டி தேவை படத்தில் நடித்தார்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீரென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பாதித்த பணம் அனைத்தும் கரைந்து போகவே வறுமையில் தள்ளப்பட்டார். 2012ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு 38 வயது. இறந்த அஸ்வினியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லக்கூட பணமின்றி தவித்துள்ளனர். பார்த்திபன் அதற்கு உதவி செய்துள்ளார். அவ்வப்போது அஸ்வினி குடும்பத்திற்கும் உதவி உள்ளார். அஸ்வினியின் மகன் படிப்பு செலவும் பார்த்திபன் ஏற்றுக் கொண்டிருப்பதாக சொல்வார்கள்.