துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து பாப்புலர் ஆனதை விட தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பாப்புலர் ஆனதுதான் அதிகம். தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸ், விஷால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
சமீபகாலமாக அவர் அமைதியாக இருந்து வருகிறார். என்றாலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா பற்றி முன்பு அவர் வெளியிட்ட கருத்துகள் இப்போது அவருக்கு எதிராக வந்து நிற்கிறது.
கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகராஜூ அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3வது நகர போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.