சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இப்போது இசை அமைப்பாளர்கள் நடிகராகும் காலம். ஆனால் 1980களிலேயே இசை அமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் (சங்கர்) - கணேஷ். 'ஒத்தயடி பாதையிலே' என்ற படத்தில் நாயகனாக அறிமுமானார். இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம் தயாரித்தார். பவுர்ணமி என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர்களுடன் ஜக்கு, மாயா, நளினி, ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. குறிப்பாக “செப்புகுடம் தூக்கிட்டு...” இன்றளவும் ரசிக்கப்படுகிற கிராமிய பாடலாக இருக்கிறது. ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த காலகட்டத்தில் வெளிவந்த 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படத்தின் சாயலில் இந்த படம் வந்ததே தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. படம் தோல்வி அடைந்ததால் கணேஷ் அதன்பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் அதையும் கைவிட்டார். படத்தில் அறிமுகமான ஹீரோயின் பவுர்ணமி அதன்பிறகு வேறு படங்களிலும் நடிக்கவில்லை.