படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக உள்ளது தென்னிந்திய திரைப்ட தொழிலாளர் சம்மேளனம். சுருக்கமாக பெப்ஸி என்றழைக்கப்படுகிறது. இதன் முக்கிய கூட்டம் இன்று(ஜூலை 25) சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது.
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் உயரத்தில் இருந்து விழுந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். திரைப்பட படப்பிடிப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று சென்னையில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை பெப்ஸி நிர்வாகம் நடத்தியது.
இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாதுகாப்பு அம்சங்கள், மருத்துவ உதவிகள் உள்ள படப்பிடிப்பு நிலையங்கள், அவுட்டோர் படப்பிடிப்பு இடங்களில் மட்டுமே பணிபுரிவோம் என அறிவித்துள்ளனர்.
அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு
தீ விபத்து நடக்காமல் இருக்க அனைத்து உபகரணங்கள், பாதுகாபப்பு
விபத்து நடந்தால் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி
பெண் கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு கழிவறை வசதி, உடை மாற்ற வசதி
லைட்மேன் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், ரிப்லேக்டிவ் ஜாக்கெட், கிளவுஸ், காலணி, பெல் உள்ளிட்ட வசதிகள்
ஸ்டுடியோக்களில் உள்ள கோடாக்களில் (உயரமான இடத்தில் லைட் வைக்கும் இடம்) பெல் அணிவது, பாதுகாப்பு கருவிகள்,
என நிறைவேற்ற வேண்டிய சில முக்கியமான கோரிக்கைகளையும் இன்றைய கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
சிறிய தயாரிப்பாளர்கள் தக்க பாதுகாப்பு வசதிகளையும், விபத்து நடந்தால் நஷ்டஈடும் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.