ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
எஸ்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா தத்தா, இயக்குனர் வாலியை தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு பெற்று கொடுத்தது தான் தான் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம். பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார். மிக அருமையாக இருந்தது, அந்த படத்தில் நான் நடித்தேன். படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் எனது நண்பர், மனிதாபிமானமிக்கவர். அவரிடம் என்னுடைய எல்லா விஷயத்தையும் சொல்வேன். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர் வாலி பற்றியும், அவரிடமிருந்த 'மெட்ராஸ்காரன்' கதை பற்றியும் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச தயாரிப்பாளர். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.