அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
எஸ்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா தத்தா, இயக்குனர் வாலியை தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு பெற்று கொடுத்தது தான் தான் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம். பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார். மிக அருமையாக இருந்தது, அந்த படத்தில் நான் நடித்தேன். படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் எனது நண்பர், மனிதாபிமானமிக்கவர். அவரிடம் என்னுடைய எல்லா விஷயத்தையும் சொல்வேன். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர் வாலி பற்றியும், அவரிடமிருந்த 'மெட்ராஸ்காரன்' கதை பற்றியும் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச தயாரிப்பாளர். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.