சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக வேண்டிய படம் 'புறநானூறு'. ஆனால், அப்படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வியும் இருந்தது. தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பரும், 'பிரின்ஸ், மாவீரன்' படங்களின் தயாரிப்பாளருமான அருண் விஷ்வா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உறவினர் ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தை முதல் பிரதி அடிப்படையில் தனது சொந்த நிறுவனமான மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப் போகிறாராம் சுதா.
சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்க உள்ள ஒரு படத்திலும் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவற்றிற்கு முன்பாக சுதா இயக்க உள்ள 'புறநானூறு' படம் ஆரம்பமாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.