ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இணைய, சமூக வலைத்தள உலகில் கடந்த சில நாட்களாக சில பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. யு டியுப் ஊடகங்கள் என்ற பெயரில் சிலர் அவதூறுகளைப் பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது என்ற புகார்களும் உண்டு.
இதனிடையே, நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் இது குறித்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கும் தனது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள், நபர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையை முடித்துள்ளார்.
அடுத்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் விஷ்ணு மஞ்சு இந்த பிரச்சனை குறித்து பேசியதை மேற்கோள் காட்டி, “தமிழ்நாட்டில் உள்ள நடிகர் சங்கம் எழுந்திருக்க வேண்டும். அரசு, உதயநிதியின் ஆதரவுடன் இது போன்ற பொய்யர்கள், யு டியுபர்கள் என அழைக்கப்படுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது நிலைக்கு இந்தத் திரையுலகமும் ஆதரவு தரும் என்று நம்புகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.