இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல் வேடமணிந்து நடனமாடியிருக்கிறார். முதலில் இது எளிதாக இருக்கும் என்று நினைத்த சரண்யாவுக்கு பயிற்சியின் போதே முட்டியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசியும் அளவுக்கு வந்துள்ளதாம்.
இந்த அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, '5வது நாள் ஸ்டேஜ் பெர்பார்மன்ஸின் போது நாங்கள் எலிமினேட் ஆகிவிடுவோம்னு நினைச்சோம். அடுத்த 5 நிமிஷத்துக்கு முட்டின்னு ஒன்னு இல்லைன்னு நினைச்சிட்டு ஒரு நாய்க்குட்டியாவே மனசார நம்பி ஆடினேன். ஆடி முடிச்சு எழுந்து நின்னு பார்த்தா போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எழுந்து நின்னு கைத்தட்டுனாங்க. மாஸ்டர் கண்ணுல கண்ணீர். அன்னைக்கு கோல்டர் பெர்பார்மன்ஸ் ஜெயிச்சோம்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சரண்யாவின் இந்த அர்ப்பணிப்பான நடனத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.