ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல் வேடமணிந்து நடனமாடியிருக்கிறார். முதலில் இது எளிதாக இருக்கும் என்று நினைத்த சரண்யாவுக்கு பயிற்சியின் போதே முட்டியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசியும் அளவுக்கு வந்துள்ளதாம்.
இந்த அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, '5வது நாள் ஸ்டேஜ் பெர்பார்மன்ஸின் போது நாங்கள் எலிமினேட் ஆகிவிடுவோம்னு நினைச்சோம். அடுத்த 5 நிமிஷத்துக்கு முட்டின்னு ஒன்னு இல்லைன்னு நினைச்சிட்டு ஒரு நாய்க்குட்டியாவே மனசார நம்பி ஆடினேன். ஆடி முடிச்சு எழுந்து நின்னு பார்த்தா போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எழுந்து நின்னு கைத்தட்டுனாங்க. மாஸ்டர் கண்ணுல கண்ணீர். அன்னைக்கு கோல்டர் பெர்பார்மன்ஸ் ஜெயிச்சோம்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சரண்யாவின் இந்த அர்ப்பணிப்பான நடனத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.