குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை கடந்த ஆண்டே இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. துருவ் விக்ரம், கவின் உள்ளிட்ட சில நடிகர்களை சந்தித்து கதை சொல்லி அவர் கால்சீட் கேட்டதாகவும் கூறப்பட்டது. என்றாலும் ஓராண்டாக அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது விரைவில் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டுமின்றி ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும், விஜய் சேதுபதி மகன் சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுவதோடு, இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பதாகவும் கூறுகிறார்கள். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.