இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் தமிழர்கள் வாழ்வை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் நாயகிகளில் ஒருவரான மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் விக்ரம் உடன் நடித்தது பற்றி கேட்டார். அதற்கு மாளவிகா, ‛‛முதன்முதலில் சண்டைக்காட்சியில் நடித்த படம் இது. நான் செய்த முட்டாள்தனத்தால் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால் விக்ரம் எனக்கு ஒத்துழைப்பு தந்தார். அவர் இல்லாத இந்தப் பயணத்தை கற்பனை செய்ய முடியவில்லை'' என்றார்.
மற்றொருவர் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கேட்க, ‛‛திருமணமான பெண்ணாக என்னை பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்'' என்றார். இன்னொருவர் இதுவரை நீங்கள் நடிக்காத எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்க, ‛கேங்ஸ்டராக நடிக்க ஆசை' என்றார்.