ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ரயிலிலேயே படமாக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரயிலிலேயே படமானது 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' என்ற படம்.
இந்த படத்தில் ஜெய்சங்கர், சோ, விஜய நிர்மலா, விஜய லலிதா, எஸ்.என். பார்வதி, எஸ்.ஏ.அசோகன், செஞ்சி கிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி. ராமதாஸ், கே.விஜயன் மற்றும் 'கள்ளபார்ட்' நடராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. இறந்தவருடன் பயணித்த ஒரே ஒரு சக பயணி சோ. இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைப் பிடிக்கும் பணி சி.ஐ.டி ஜெய்சங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சோவின் உதவியுடன் வழக்கைத் தீர்க்கவும், இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். இதுதான் படத்தின் கதை.
புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஒன்றின் இந்த கதை தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் தயாரானது. முதல் படமாக மலையாளத்தில் 1967ல் 'கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் தயாரானது. இதில் பிரேம் நசீர் வழக்கைத் தீர்க்கும் சிஐடி அதிகாரியாக நடித்தார். 1968ல் தமிழில் நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. திரைக்கதை வசனத்தை சோ எழுதியிருந்தார். திருமலை, மகாலிங்கம் இரட்டையர்கள் இயக்கி இருந்தனர்.