தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சைரன் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கப் போகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் முக்கிய படங்களில் நடித்திருந்தார்கள். சாம்பிகளை மையமாகக் கொண்ட கதையில் உருவான மிருதன் படத்தின் இரண்டாம் பாகமும் அதேபோன்ற இன்னொரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறுகிறார்கள். இதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவி விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போகிறார்.