படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இந்தியாவில் இயற்கை பேரிடர் நிகழும் போதெல்லாம் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் மொழி பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்ட பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டம் ஆகின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களின் பங்களிப்பாக கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் லட்சங்களில் உதவிக்கரம் நீட்டிய நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். இதை அடுத்து நடிகர் பிரபாஸ் தற்போது இரண்டு கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸிற்கு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அதிக ரசிகர்கள் இருப்பதும் இந்திய அளவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறிவிட்டதும் தான் இந்த அளவிற்கு அவர் தாராளமாக நிவாரண நிதி வழங்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது.